துபாயில் எண்ணற்ற தொண்டு செயல்களை மேற்கொண்டு வருபவர் நம் தமிழகத்தை சேர்ந்த திரு. கௌஸர்.
தமிழக மக்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்து வரும் அணைத்து மாநிலத்தை சார்ந்தவர்கள் மற்றும் நமது அண்டை நாடான ஸ்ரீலங்கா நாட்டிலும் இருந்து வந்து இங்கு சில போலி ஏஜெண்சிகளால் ஏமாற்றப்பட்டு இங்கு தவித்தவர்களுக்கு அவரால் முடிந்த வரை துபாயில் வேலை வாங்கி கொடுத்தும். பலரை மீட்டு அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதும் மேலும் முக்கியமாக துபாயில் மரணம் அடைந்தவர்களை அந்நாட்டு மண்ணிலே அவர்களுக்கு இறுதி சடங்கு செய்வது,
இறந்தவர்களின் உடலை சொந்த நாட்டுக்கு அனுப்புவது என்பது சாதாரண காரியம் இல்லை. இவரின் உதவியால் எண்ணற்ற உடல்களை சொந்த நாட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
இவர் தற்போது “HOPE” என்று ஒரு குழு அமைத்து இது போன்ற நற்செயல்களை குழுவாக அமைத்து சிறப்பாக செய்து வருகிறார். இந்த குழுவின் அறிமுக விழா 17.06.2023 அன்று துபாய் அல்பர்ஷாவில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் புகழ் – விக்ரமன், இயக்குனர் மந்திரமூர்த்தி (அயோத்தி திரைப்படம்), DR. அப்துல்லாஹ் (சேர்மன் அப்துல்லாஹ் குரூப்) பங்கேற்றனர்.
மேலும் துபாயை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
இக்குழுவின் சார்பாக அயோத்தி திரைப்படத்துக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் துபாயை சேர்ந்த ஏராள சமூக ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.