கடந்த_2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்காக, விஜயகாந்திற்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். தனியாக நிற்காமல் எங்கள் கூட்டணிக்கு வந்திருந்தால் கலைஞர் கண்டிப்பாக முதல்வராக இருந்திருப்பார்.
கலைஞர் முதலமைச்சராகிய தைரியத்துடன் இன்றும் கலைஞர் உயிரோடு இருந்திருப்பார். கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ஜெயலலிதா இறந்திருக்க மாட்டார். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்து தற்போது வரை இருந்திருப்பார்.
விஜயகாந்த் செய்த துரோகத்தின் காரணமாகத்தான் கலைஞர் உயிரிழந்தார். கலைஞர் இறக்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாமல் இறக்க காரணம் விஜயகாந்த் தான்- நெல்லையில் அல்வா வழங்கியபின் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.