தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஜூலை 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினர்.
அந்நிகழ்வில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் , ‘அரசியல் ஆளுமை ஸ்டாலினிடம் இருக்குமேயானால், மறுபடியும் இப்போது தேர்தல் நடத்துங்கள். 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கவைத்து ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்’ என்றார்.
#Dindigulsrinivasan | #damaaram | #ADMK | #DMK | #Damaaram