அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ₹2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது வழக்குப்பதிவு.
மேலும் இது தொடர்பாக அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ல், ₹3.21 கோடி மதிப்புள்ள 21 சொத்துகள் வைத்திருந்ததாகவும், 2021 தேர்தலில் போட்டியிடும்போது அவரிடம் ₹16.44 கோடி மதிப்பில் 38 சொத்துகள் அதிகரித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தகவல்.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு செய்ததாக குற்றச்சாட்டுக்கு சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக சென்னையில் 16 இடங்களும் கோயம்புத்தூரில் ஒரு இடமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடமும் வீடு சோதனை நடைபெறுகிறது.
#Sathya | #MLA | #ADMK | #Damaaram